Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Thursday, 29 March 2012

தேசிய அளவில் கொடுக்கப்படும் விருது


எந்த ஒரு நாட்டிலும் தேசிய அளவில் கொடுக்கப்படும் விருதுகளுக்கு படைப்புகளை தேர்ந்து எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

யாரோ மண்டபத்தில் எழுதிகொடுத்ததை எடுத்துக்கொண்டு வந்து என்னுடையது தான் என்னுடையது தான் ஐயா பரிசு கொடுங்கள் என்று கேட்டால், எந்த கேள்வியும் கேட்க்காமல் கொடுத்துவிடுகிறது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக.

ஆடுகளம் தமிழகத்தின் சேவல் சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு என்றும், அந்த பகுதி மக்களின் பழக்கவழக்கங்கள் மட்டும் இல்லாது கலாச்சாரத்தின் பதிப்பு என்றதாலும் விருதுக்கு உரித்தானது என்று சொன்னார்கள்.

ஆனால் ஆங்கிலத்தில் seabiscuit என்று வந்த படத்தினை குதிரைக்கு பதில் சேவலை கொண்டு ஆங்கிலத்தில் பேசிய வசனங்களை தமிழில் பேசியதாக சொன்னால் அது இவரது சொந்த படப்பாக ஆகிவிடுமா???????????

இதிலே ஈ அடிச்சான் காப்பி என்று ஊரில் சொல்வார்களே அந்த மாதிரி ஒல்லிபிச்சானாக ஒரு கதா நாயகன் வேண்டும் என்றால் தனுசை போடுங்கள் என்று படமாக்கி இருக்கிறார்கள்.

ஆங்கில கதையில் மகனை இழந்து தவிக்கும் அந்த தகப்பனின் மனதை அந்த குதிரையும் அதன் ஓட்டியும் எப்படி மயிலிறகால் வருடி ஆற்றுகிறார்கள் என்ற அந்த புனித்மான உணர்வுகளை தமிழில் அந்த வயதானவரின் மனைவியின் மேல் சந்தேகம் படும்படியும் பொறாமை குணம் கொண்டவனாகவும் வக்கிரபடுத்தியது மட்டுமே மாற்றங்கள்.

அவைகள் தவிர, நன்றாக படித்து பெரிய ஆளாக ஆகவேண்டும் என்று நினைத்தும் படித்தும் வருபவனை குடும்ப நிலையை காரணமாக காட்டி நாயகனை பிரியும் குடும்பத்தின் மேல்வரும் கோபத்தை குத்து சண்டையில் காட்டி அடிப்படும் அந்த அற்புதமான காட்சிகளை தனுசு தெருசண்டையில் இறங்குவதாக காட்டுவது அபத்தத்தின் உச்சம்.

போட்டியாளன் தனது குதிரைக்கு நிகர் எதுவும் இல்லை என்று சொல்லும் காட்சிகளை, பாவம் அந்த காவலர் தனது ஆத்தாவை அசிங்கமாக பேசுவதும். தேற்றமுகத்தோடு சாவக்கிடக்கும் கிளவி மூஞ்சில் எப்படி முழிப்பேன் என்று சொல்வதும் நல்ல நகைச்சுவைகள்.

அட படம் பார்க்கும் நமக்கு தான் இது ஆங்கில படத்தின் ஈ அடிச்சான் காப்பி என்று தெரியாது. இதையே தொழிலாக கொண்டு இயங்கும் பத்திரிக்கைகளுக்கும், விருது தனிக்கை குழுவிற்கும் தெரியவில்லை என்று சொன்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சரி சென்ற ஆண்டுதான் ஒன்று தெரியாதவர்கள் விருது தனிக்கை குழுவில் எனக்கு நா.உவை தெரியும், ச.உவை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள் என்று பார்த்தால் இந்த ஆண்டும் அதே கதை.

No comments:

Post a Comment