ஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா ?
எல்லாவற்றுக்கும்
ஓர் அற்புத நிவாரணம் தான் ஆட்டுக்கால் சூப். மூட்டு வலி இருக்கும் மூத்த
பதிவர்களுக்கும், எலும்புகள் வளரும் பருவத்தில் இருக்கும் அவர்கள்
குழந்தைகளுக்கும் கூட மிக அருமையான உணவு.
ஆட்டுக்கால்
சூப் எப்படி வைப்பது, என்னென்ன தேவை.. நல்ல மழை அல்லது குளிர் நாளாக
இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் சூடான ஆட்டுக்கால் சூப்பை ஜன்னலோரமோ
அல்லது பால்கனியிலோ நின்று க்ளென்ஃபெடிச் விஸ்கியுடன் சோடா சேர்த்து
அருந்துவதைப் போல் சிறிது சிறிதாக அருந்தினால் மனம் ஒருநிலைப்பட்ட தவநிலையை
அடையலாம் :D.
நாலு
ஆட்டுக்கால், ரெண்டு பெரிய வெங்காயம், ரெண்டு தக்காளி, கொஞ்சம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு மற்றும்
சீரகத்தூள் இதெல்லாம் இருந்தால் நீங்கள் சூப் வைக்க ஆரம்பிக்கலாம். முதலில்
ஆட்டுக்காலை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தப்படுத்திவிட்டு,
நன்கு வேகவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு
வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் முறையே
போட்டு வதக்கவும்.
வேகவைத்த
ஆட்டுக்காலை அப்படியே அந்த பாத்திரத்தில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள்
மற்றும் உப்பு ஆகியவற்றை தங்கள் நாக்கின் நீளத்திற்கேற்ப போட்டு நன்கு
கிளறி விடவும். அதன் பின் 5 குவளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட்டு
இறக்கினால் ஆட்டுக்கால் சூப் ரெடி. உப்பு சேர்க்கும் போது கவனமாக
சேர்க்கவும். உப்பு கூடினால் தண்ணீரும், தண்ணீர் கூடினால் உப்பையும் மாற்றி
மாற்றி சேர்த்து சமன்படுத்திக் கொள்ளலாம். இடையிடையே கரண்டியில் கொஞ்சம்
எடுத்து சுவையைச் சரி பார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.
தொடர்ந்து
கணினியில் இருப்பவர்களுக்கு மணிக்கட்டிலும், கால் மூட்டிலும்
வலியிருந்தால் வாரம் ஒருமுறை ஆட்டுக்கால் சூப் குடித்து நிவாரணம் பெறலாம்.
வார இறுதியில் விருந்துகளுக்கு செல்பவர்கள், செல்லுமுன் சூப் தயார் செய்து
வைத்து விட்டுப்போனால் மறுநாள் காலையில் சுடவைத்து இரண்டு லார்ஜுகள் சூப்
குடித்தால் ஹாங்க் ஓவரிலிருந்து உடனடி விடுதலைக்கு உத்தரவாதம்.
வாழ்க ஆட்டுக்கால் சூப்புடன்!!!
No comments:
Post a Comment