எங்கே செல்கிறது தமிழகம்?
'கல்யாண
வீடானாலும், இழவு வீடானாலும் மாலையும் மரியாதையும் எனக்குத் தான்'
அப்படின்ற ஒரே நோக்கத்தோட குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்ச கதையா ஒரு
முதல்வர்... தங்கள் சக மனிதர்களின் கல்லீரலைக் டாஸ்மாக்கால் கசக்கி வரும்
கலர் டிவி மற்றும் பல இலவசங்களில் புதைந்து போன குடிமக்கள்... கொஞ்சம் கூட
சமுதாய அக்கறை அல்லது குறைந்த பட்சம் நம்மள சுத்தி நாட்டுல என்ன
நடக்குதுன்னு கூட தெரிஞ்சிக்காத சமூகம்...கிட்டத்தட்ட எல்லா மா நிலத்திலும்
ஊடகங்களை அரசியல் சக்திகளுக்கு தாரை வார்த்து விட்ட தேசம்... உச்சி வெயில்
மண்டைய பொளந்தாலும் 'எங்க கழகத் தொலைக்காட்சில இன்னைக்கு மழை பெய்யுதுன்னு
சொல்லிட்டாங்க'ந்னு குடை புடிச்சிட்டு போற ரத்ததின் ரத்தங்களும்,
உடன்பிறப்புகளும் நிறைந்த அரசியல்...
இது எல்லாம் எப்ப மாறும்???
ஒரு வேளை எதிர்காலத்தில பெரிய அரசியல் புரட்சி நடக்குமோ??
எந்த செய்திய பாத்தாலும், அதுல ஒரு உள்குத்து, அரசியல், சுய நலம்.. ஒரே வெறுப்பு மண்டுது மண்டையில.... உங்களுக்கு???
No comments:
Post a Comment