Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Wednesday, 21 March 2012

சிறு நகர காதலின் சிரமங்கள்

1. நம் தெருப் பிகர் நம்மை ஏறெடுத்தும் பார்க்காது. ஏனென்றால் நாம் சின்ன வயதில் கிழிந்த டவுசர் போட்டு, சளி ஒழுகிக் கொண்டு சுற்றியது முதல், பரிட்சையில் பெயிலாகி, திருட்டு தம் கட்டி அடிவாங்கியது வரை அவர்களின் மனதில் பதிந்திருக்கும். என்னதான் பின்னாளில் நாம் ஓரளவு பெர்சனாலிட்டி மெயிண்டைன் பண்ணினாலும் கதைக்காகாது. அடுத்த தெரு பையன்களுக்கு சான்ஸ் அதிகம்.அல்லது வாலிப வயதில் அந்த தெருவுக்கு புதிதாக குடிவரும் பையனுக்கும் வாய்ப்பு உண்டு.

2. சிறு நகரங்களில் வசிக்கும் மாத சம்பளக்காரர்கள் தவணை முறையில் வீடு கட்டுவார்கள். அதில் தங்களுக்கு 650 சதுர அடியும், வாடகைக்கு விடுவதற்க்கு 550 சதுர அடியிலும் கட்டுவார்கள். (அப்போத்தானே லோனை அடைக்க வசதியா இருக்கும்). அங்கே பிள்ளைகளுக்கு தனி அறை என்பது வைரஸ் இல்லாத சிஸ்டம் போல. தனிமையில இருந்தாத்தானே பீல் பண்ண முடியும்?


3. அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போற ஆளா இருந்தாலும் கஷ்டம். வீட்டிலே எந்நேரமும் லௌகீக பேச்சுத்தான். அவன் அங்க அரை கிரவுண்டு வாங்கிட்டான். இவன் இங்க சீட்டு போட்டிருக்கான். நீ நல்லா படி. அப்பதான் இங்க வேலை கிடைக்கும், இங்க வேலை கிடைக்கும்னுதான் உரையாடலே இருக்கும். இந்த சூழ்நிலையிலே ஒருத்தனுக்கு எப்படி காதல் துளிர்க்கும்?

4.கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு,உறியடி என ஹீரோவாக மாறும் வாய்ப்பு அதிகம். இங்கே அதிகபட்சம் ஒரு விக்கிபால் டோர்ணமெண்ட் நடக்கும். அதில் மேன் ஆப் தி சீரிஸ் விருது வாங்கினால் கூட 32 ரூபாய்க்கு ஒரு வெங்கலக்கிண்ணி தருவார்கள். அதை தூக்கிக் கொண்டு தெருவில் வந்தால் அஞ்சு, பத்து காசு தர்மம் தான் கிடைக்கும்.

5. கிராமங்களில் திருவிழாவில் பெண்களை இம்பிரஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும். இங்கே திருவிழாக்கள் சுருங்கிவிட்டன. அதிகபட்சம் ஒரு மெல்லிசைக் கச்சேரி. இப்போது ஆடல் பாடல். இங்கே என்ன வாய்ப்பு கிடைக்கும்?

6. இதையும் மீறி கம்ப்யூட்டர் செண்டர்லயோ, காலேஜிலயோ, கஷ்டப்பட்டோ கால்ல விழுந்தோ யாரையாச்சும் கரெக்ட் பண்ணீட்டாலும் ஈஸியா அத வளர்த்துற முடியுமா?

7. முன்னால சொன்ன மாதிரி சின்ன வீடுங்கிறதால பிரைவசி கிடைக்காது.
எப்படி கவிதை எழுதுறது? எதிர் பார்ட்டிக்கிட்ட இருந்து போன் வந்தா பிரீயா பேசுறது?

8. அனேகமாக ஒன்னொரு தெருவிலும் குறைந்தது ஒரு வீடாவது இருக்கும் பின்வரும் வகையில். அந்த வீட்டின் வாரிசுகள் திருமணமாகியோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளியூரில் இருப்ப்பார்கள். கணவர் ரிட்டயராகும் வயதில் இருப்பார். மனைவியிடம் லீனியண்ட்டாகவும் இருப்பார். அம்மாதிரி வீடுகளில் பிற்பகல் முதல் முன்மாலை வரை (உச்சிக்காலம் முதல் சந்தியாகாலம் வரை) தெருப் பெண்கள் கூடி கும்மியடிப்பார்கள். அதில் கோல நோட் எக்சேஞ், சமையல் குறிப்பு ஆகியவை 1 சதவிகிதமும், புறணி 99 சதவிகிதமும் இருக்கும். யார் யாரை பார்க்கிறர்கள் முதல் பலவும் அலசப்படும். இந்த ரா அதிகாரிகளிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலிப்பது கடினம்.

9. கிராமங்களில் வயல், காடு என பல மறைவிடங்கள். பெருநகரங்களில் பீச்,பிளாசாக்கள். சிறு நகரத்தில் மூன்று நான்கு தியேட்டர்கள் தான் இருக்கும். அங்கே காதலியை கூட்டிப் போனால் அடுத்த நாள் ஐ நா சபை வரைக்கும் தெரிந்துவிடும். லைப்ரரி என்று ஒன்று இருக்கும். அங்கு கூட்டிப் போனால் காதல் வராது. ஆஸ்துமா தான் வரும்.

10. பேரூராட்சி, நகராட்சி என்ற பெயரில் ஒரு பூங்கா ஒன்றை அமைத்து இருப்பார்கள். அது நம் தமிழ்மணப் பூங்கா போல ஆரம்பத்தில் அட்டகாசமாக துவங்கி பின் வழக்கொழிந்து போயிருக்கும். அங்கேயும் சென்று காதல் செய்ய முடியாது.

இவ்வளவு பிரச்சினையையும் மீறி சிறு நகரங்களில் காதலிப்பவர்களுக்கு வந்தனங்கள்.

No comments:

Post a Comment