முத்தப்பக்கம்....
அக்கம் பக்கம் பார்த்து
கன்னத்தோடு கன்னம் மட்டும்
உரசி போதுமா என்கிறாய்
கல்நெஞ்சக்காரி
நான் கேட்டது முத்தமடி…
அருகில் அமர்ந்து
கதைகள் பேசி
சிரித்து கொஞ்சி
பை சொல்லிவிட்டு
சென்றுவிடுகிறாய்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்கிறது
இன்னும் என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் ஸ்பரிசம்
உன்னை நெருங்கிவரும்
ஒவ்வொரு முறையும்
அவுங்க இருக்காங்க
இவுங்க இருக்காங்க என்கிறாய்
தவிப்போடு நானும் இருக்கிறேன்…
No comments:
Post a Comment