Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Saturday, 12 May 2012


இன்றைய மாலைமலர் செய்தியில் மதுரை ஆதீனம் விடுத்துள்ள ஒரு அறிக்கை வாசகர்கள் மத்தியில் கிளப்பி உள்ள சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களையும் பார்க்கும்போது எந்த அளவிர்க்கு மக்கள் இந்த விசயத்தில் வெறுப்பில் இருக்கின்றனர் என்று புலனாகிறது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதற்காக கீழ் தந்துள்ளேன்.  தவறாமல் உங்கள் கருத்தையும் பதியவும்.

நான் சிங்கம் தேவையில்லாமல் என்னை சீண்ட வேண்டாம்: மதுரை ஆதீனம் எச்சரிக்கை
மதுரைஆதீனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மதுரை ஐகோர்ட்டு கிளையில் நித்யானந்தாவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நியாயமே வெல்லும் என்ற கருத்திற்கு வலிமை ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சித்த தருமபுரி ஆதீன மடத்தின் மதுரை நிர்வாகி குருசாமி தேசிகர், இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்படும்.

இதற்கான நடவடிக்கைகளில் நித்யானந்தா ஈடுபடுவார். அடுத்த ஆதீனத்தை நியமிக்க எனக்கு உரிமை உண்டு. அதுபற்றி காஞ்சி ஜெயேந்திரர் பேசக்கூடாது. காஞ்சி பீடத்திற்கு நான் பல தடவை உதவியிருக்கிறேன். அதுபோல திருவாடுதுறை ஆதீனத்திற்கும் பல உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

34 வயதில் ஆட்பலம், பண பலம், ஆற்றல், நிர்வாகத்திறன் இருப்பதால் தான் நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக்கிறேன். நித்யானந்தா போல் திறமை கொண்ட ஒருவரை எதிர்ப்பாளர்கள் காட்டினால் அவரை நான் ஆதீனமாக்குகிறேன். எனது செய்தியை பரபரப்பாக்கி என்னை யாரும் மிரட்ட வேண்டாம். நான் எதையும் பதுக்கவும் இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். நான் சிங்கம் போன்றவன்.

என்னை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். நேற்று கூட ஆதீன மடத்தில் நான் லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகிவிட்டது. உடனே எனது கையில் இருந்த செல்போன் மூலம் நித்யானந்தாவிற்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர் ஓடி வந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார். லிப்ட் சாவியை எதிர்பார்க்காமல் என் உயிர் மீது அக்கறை கொண்டு செயல்பட்டவர்தான் நித்யானந்தா. இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை ஆதீனம் விடுத்துள்ள இந்த அறிக்கைக்கு வாசகர்கள் எழுதிய விமர்சனங்களை  கீழ் தந்துள்ளேன்.   


Saturday, May 12,2012 04:30 PM, விசியன் said:
நீ சிங்கம் இல்ல இந்து மதத்திற்கு ஓர் அசிங்கம் 
Saturday, May 12,2012 12:42 PM, நாஞ்சில் 2417 said:
நீங்கள் சிங்கம்தான்.. ஆனால் பல்லு போன சிங்கம்..! யோவ்.. உன்னை ஓடி வந்து காப்பாத்தினது உன்மேலுள்ள அக்கறையினால் அல்ல..! இன்னும் சொத்து பூரா கைக்கு வந்து சேரவில்லை என்ற காரணம்தான்..! அதன்பிறகு நித்தியே உன்னை லிப்டில் அனுப்பிவைப்பார்..! 
Saturday, May 12,2012 11:47 AM, பாஸ் said:
நித்யானுக்கு பணம் பலம் மட்டும் அல்ல மத்த பலமும் இருக்கு ரஞ்சிதாவை கேட்டுபார் 
Saturday, May 12,2012 10:48 AM, நந்து said:
எ சிங்கம் போல எ சிங்கம் போல நடந்துவரண்டி அவர சின்டினவன் தாங்க மாட்டன் ...........ஆதினமா கொக்கா ..... 
Saturday, May 12,2012 05:53 AM, CH நமசிவாயம் said:
இளைய அதீனத்தலைவர்கள் காலமெல்லாம் நியமிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த நியமனங்கள் எவையும் இப்படி சர்ச்சைக்கு இடம் தர வில்லை என்பதை உணர மறுக்கிறது மகா சந்நிதானம்! 
On Saturday, May 12,2012 06:32 AM, மூன்றாவது பார்வை said :
அர்த்தமுள்ள இந்து மதம் எதிர்காலத்தில் அர்த்தமில்லா இந்து மதமாக மாறபோகிறது , ஆதினம் இனி வரும் காலங்களில் தேவை இல்லா ஒன்று !!! அது பணம் கொடுத்து வாங்கும் ஒரு தொழில் அல்ல !!! ஆன்மீக பணியில் இருப்பவர்களுக்கு சொத்துக்கள் எதற்கு? மக்களை கால்நடையாக சென்று சந்திப்பவர்கள் தான் ஆன்மீகவாதிகள். ஆன்மிகம் என்பது எல்லாவற்றையும் விடுவதை பற்றி யோசிப்பது. 
On Saturday, May 12,2012 02:10 PM, கோவிலூர் குசும்பன் said :
"ஆன்மிகம் என்பது எல்லாவற்றையும் விடுவதை பற்றி யோசிப்பது." - இதில் 'யோசிப்பது' என்ற பேச்சுக்கே இடமில்லை..! எல்லாவற்றையும் விட்டுவிட்ட பிறகுதான், ஆதீனம் என்ற அந்தஸ்துக்கே வர முடியும்; வர வேண்டும்.! ஆனால் நடைமுறையில்....? " பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் " - என்பது பழமொழி.! பிணம் திறக்கிறதோ இல்லையோ, இந்த ஆதீனங்கள் வாய் திறப்பது காலம் காட்டும் உண்மை.!! இதுவா அர்த்தமுள்ள இந்து மதம்.? [ முதல் பார்வையின் கருத்துக்கு, மூன்றாம் பார்வை ஏன்.? ] 
Friday, May 11,2012 08:03 PM, திருடன் said:
ஆமா காட்டில் இருக்க வேண்டியது எல்லாம் நாட்டில் வைத்தால் இப்படிதான் 
Friday, May 11,2012 07:15 PM, பாஸ்கரன் said:
இன்னுமா இந்த ஊரு உங்கள நம்பிகிட்டு இருக்கு.... அது சரி.... சண்டையல கிழியாத சட்டை எங்க இருக்கு...? போங்கையா... சும்மா விமர்சனம் எழுதாம பொய் புள்ள குட்டிகளை நல்லா படிக்க வைங்கப்பா... 
Friday, May 11,2012 07:02 PM, kramesh said:
நித்திய உகும் ஆதின த்துக்கும் கடும் போட்டி யார் முதலிஇல் ரஞ்சித்தவேடம் செல்வது என்ற போடில் ஆதினம் லிப்டில் நித்திய படீஇல் மின்சாரம் தடை காரணமாக ஆதினம் மாடேகேட்டார் 
Friday, May 11,2012 04:52 PM, அறிவாளன் said:
"34 வயதில் ஆட்பலம், பண பலம், ஆற்றல், நிர்வாகத்திறன் இருப்பதால் தான் நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக்கிறேன்." எல்லாம் சரிதானுங்கோ ஆனால் ஒரு ஆன்மீக நிறுவனத்திற்கு தலைவராக வரத் தேவையான அடக்கம், அறிவு, நிதானம், சர்ச்சையில் சிக்காமை, ஒழுக்கம், மரபு மீராமை, இதில் ஒன்று கூட இல்லையே! ஒரு முட்டுசந்து மேடை பேச்சாளன் போல் நீங்க ரெண்டு பெரும் போடற காமெடி இருக்கே " ஷ் அப்பா!!! இப்பவே கண்ணைக் கட்டுதே ...' 
Friday, May 11,2012 01:32 PM, kuppuswamykesavan said:
பொது மக்களின் நன்கொடைகளால் வாழும் எந்த நிறுவனமும் அரசாங்க உத்தரவுக்கு கட்டுப்பட்டதுதான். அதை இவர்கள் புரிந்துக்கணும். 
Friday, May 11,2012 01:32 PM, அஞ்சா சிங்கம் சதீஷ் said:
பெருசு.... சொல்றத தெளிவா சொல்லு.... லிப்ட் என்ன ஆச்சு?.. நித்தி எங்க மிதிச்சார்.. நீ எப்படி காப்பாற்ற பட்டே?....லிப்ட் டோர் காலில் மிதிபட்ட உடையும் அளவிற்க்க இருக்கு?... சரி..!..ஆறறிவு உடைய மனிதர்கள் மேம்மையடைந்து உயர்ந்த பரினான நிலைக்கு செல்வது சரியான செயல்... ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் தன்னை ஒரு படி தாழ்த்தி ஐந்தறிவு படைத்த விலங்கிற்கு இணையானவன் என்பது மேன்மையான செயலா?.. ஆன்மீக வாதின சக மனிதன் மேல் பாசமான வார்த்தைகளை தான் பிரயோகிக்க வேண்டும்... இப்படி தெலுங்கு பட டயலாக் போல் நான் சிங்கம் சீண்டி பாக்காதனு சின்னபுள்ள தனமா பஞ்ச் டயலாகெல்லாம் பேசக்கூடாது.... 
Friday, May 11,2012 01:19 PM, புவனேஸ்வரி said:
காசி ஸ்ரீ பத்ரிபுத்திர அகோரி ,நித்த்யானந்தாவின் சீடன் இவர்கள் பெயரில் எழுதுபவர்கள் எல்லாம் நித்தியின் அடிஆட்கள் தான். சீக்கிரம் இந்த ஆதீனம் மூடப்படும் அல்லது மூடும் நிலைக்கு மதுரை ஆதீனம் மற்றும் நித்தி கும்பல் கட்டாயம் கொண்டுவருவார்கள். இந்த நித்தி பயல் தன்னை எல்லோரும் உயர்வாக கருதுவதாக எண்ணிக்கொண்டால் அது மதியீனம். யாரடா சிங்கம் போக்கிரி பயலே.. ஒரு சைவன் இப்படியா தன்னை சிங்கம், புலி என்றெல்லாம் உருவகித்து கொள்வான்? அசிங்கம் நீ. 
 
Friday, May 11,2012 01:06 PM, ரெக்ஸ் said:
இவரது செயல் மிகபெரிய (அ)சிங்கம் . 
On Friday, May 11,2012 04:26 PM, xxxxx said : 
நான் தான் நித்தியானந்தம் எனக்கேவா திரும்ப கருதுக்கேக்கிரிங்கள 
On Friday, May 11,2012 05:57 PM, வெள்ளை இல்லாத வெட்டி பையன் said   
பணம் பத்தும் செய்யும் நிதம் சத்தம் செய்யும் 
Friday, May 11,2012 12:55 PM, vasu said: 
மனிதன் தப்பு செய்வது இயற்கைதான் ...... ஆனால் சாமியார் வேசம் அனிது தப்பு செய்வது மா பெரிய தப்பு.. மத்தவர்கள் தப்பு செய்யும்போது உலகம் பார்க்காது .... சாமியார் வேஷம் அனிது தப்பு செயும் போது உலகம் அவனை தான் பார்க்கும்.
Friday, May 11,2012 12:51 PM, naaravaayan said: 
இந்த ஆதீனம் எம்.ஜி.யார் ஆட்சியில் அடிக்கடி பேட்டி கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.ஆதீனம் என்று வருவதற்கு முன்னர் ஓர் பத்திரிக்கையில் இவர் ஓர் நிருபராக இருந்தவர். சடார் என்று ஆதீனம் ஆனார்..ஆனாலும் இவரால் வாயை கட்டிக்கொண்டு இருக்க இயலாமல் அரசியலில் நுழைய பார்த்தார். எம்.ஜி.யாரிடம் நடக்குமா? வாய்பொத்தி இருந்தார்..ஹிந்து மதம் விழித்துகொள்ளவேண்டும். இல்லை என்றால் சொர்க்கபுரி போல இவர்கள் ஆக்கி கொழுத்துப்போய் திரிவார்கள். எச்சரிக்கை. 
Friday, May 11,2012 12:21 PM, இந்தியன் said: 
டேய் ஒரு கரப்பான் பூச்சிய போல இருந்துகிட்டு எண்டா அந்த சிங்கத்த அசிங்கபடுத்துற
Friday, May 11,2012 11:12 AM, காசி ஸ்ரீ பத்ரிபுத்திர அகோரி said: 
ஒரு தானைத்தலைவர் தன் மகன் தான் தன் காலத்திற்கு பிறகு அரசியலுக்கு வந்து தனது தலைமைப் பதவியை ஏற்கவேண்டும் என்று விரும்பும் இந்த காலத்தில் தன் காலத்திற்கு பிறகு நிர்வாகத்தில் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இளமைத்துடிப்புமிக்க நித்தியானந்தாவை ஆதீனமாக்கும் இவர் முடிவில் என்ன தவறு? இவரை எதிர்ப்பவர்கள் இந்த மடத்துக்கு சம்மந்தம் இல்லாதவர்கள். இவரை எதிர்ப்பவர்கள் இந்து மதத்தை அவமானப்படுகிறார்கள். சாமியாரே! உங்களை யாரும் அசைக்க முடியாது! ஆனால் வார்த்தையை சாமியார் போல் பிரயோகியுங்கள்! அதுதான் சாமியாருக்கு உள்ள பெருந்தன்மை!! 

On Friday, May 11,2012 11:53 AM, இந்தியன் said : 
சிங்கம் அசிங்கமாகி விட்டதே 
On Friday, May 11,2012 11:57 AM, நித்த்யானந்தாவின் சீடன் said : 
காசி ஸ்ரீ பத்ரிபுத்திர அகோரி அவர்களே ! நல்ல கருத்து ! வரவேற்கிறேன் ! வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றி திரியும் மாணவர்கள்தான் இப்படி நித்த்யானந்தாவை கொச்சை படுத்தி எழுதுவது ! என்னவோ இவர்களெல்லாம் யோகியர்கள் மாத்ரி நினிப்பு.! டாஸ் மார்க் கடைக்கு சென்றுவிட்டுத்தான் இவர்கள் கருத்தே எழுத ஆரம்பிக்கின்றனர் ! இந்த அளவுக்கு சீர்கெட்டு போய்விட்டது நம் மாணவர் சமுதாயம் 
On Friday, May 11,2012 12:40 PM, இஸ்மாயில் said : 
குடித்து கும்மாளம் அடிக்கும் இந்த மாணவர் சமுதாயம் ஒழிக !
Friday, May 11,2012 11:05 AM, ஆதி said: 
சிங்கமே உன்னை விரைவில் கூண்டில் அடிப்பார்கள் அப்பொழுதான் நீ அடங்குவாய் 
On Friday, May 11,2012 12:12 PM, சுரேஷ் , வத்தலகுண்டு said :
ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தேவைதானா? மற்றவர்கள் போற்றும்படி வாழவேண்டும் தூற்றும்படி வாழக்கூடாது 
Friday, May 11,2012 10:53 AM, போலி சாமி said: 
நான் என்ற அகம்பாவம் கொண்ட நீ எல்லாம் ஒரு சைவ மத குரு ....... சிங்கமா நீ அசிங்கம் .... ஹான் இந்த கெழவன் அசிங்கம் .... நித்யனந்தகு ஆட்பலம், பணபலம் இருக்காம் ..... M L A க ஆல் புடிகிரிங்க ...... யோக்கியமாக இன்னொருத்தனை ஏமாற்றாமல் தன்னால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வதே பக்தியாகும். 
Friday, May 11,2012 10:45 AM, நல்லவை said: 
டேய் ஆதினம் என்ன 50 மாடி கட்டிடமா 2 மாடி தானேட இருக்கு . 30 படி ஏற முடியாத நீ சிங்கமா . நீ ஒரு அசிங்கம் புடிச்சவன் 
On Friday, May 11,2012 06:45 PM, முதல் கோணல்; முற்றும் கோணல். said :
அருணகிரி மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பு ஏற்ற சமயத்தில் எந்த விதத் தகுதியும் இல்லாதவராகத் தானே இருந்தார்? அப்போது மற்ற ஆதீனங்கள் தமது வாயில் எதை வைத்துக் கொண்டிருந்தார்கள்? அப்போது ஏன் கேள்விகளை எழுப்பவில்லை? தகுதியில்லாத ஒரு ஆதீனத்தை இத்தனை நாட்கள் மடத்தை அனுபவிக்க விட்டீர்கள். இப்போது அந்த தகுதியற்ற நபர் மற்றொரு தகுதியற்ற நபரை வாரிசாக நியமிக்கிறார். ஆரம்பமே சரியில்லை. தொடர்ந்து நடப்பதும் அப்படித்தான் இருக்கும். இப்போது உள்ள மற்ற ஆதீனகர்த்தர்கள் அனைவருமே சைவ சமய வளர்ச்சிக்கு எந்தவிதமான தொண்டும் ஆற்றாமல் வெறுமனே பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்தான். ஆதீனங்களின் இந்த போக்குகள் காரணமாக அரசு தலையிடும் நேரம் வந்து விட்டது. தமிழக அரசு விரைவில் ஒரு குழு அமைத்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Friday, May 11,2012 10:29 AM, unmaivilambi said: 
இந்த கிழட்டு சிங்கம் அரசியல்வாதி போல் அரசியல் மேடைகளில் , உட்கார்ந்து அரசியல் பேசியதுண்டு. தமிழ் நாட்டில் எத்தனையோ பேர் இருக்க பெங்களூரில் இருந்து நித்த்யானந்தாவை இறக்குமதி செய்தது ஏன்? அவர்மீது வழக்குகள் இருக்கிறதா? இல்லையா? அப்படி இருந்தால் குற்ற சாட்டிற்கு ஆளான் ஒருவரை நியமித்தது எந்த வகையில் சரி? பதில் கூறுங்கள் கிழட்டு சிங்கமே . 
Friday, May 11,2012 10:28 AM, பாரதி.. said: 
லிப்ட்டில் மாட்டிய உங்களை காப்பாற்றிய நித்தி எத்தனை பேருக்கு லிப்ட் போட்டிருக்கிறார். ஆட்பலம், பணபலம், உடல் பலம், எல்லாம் சாமியார்களுக்கும், சந்நியாசிகளுக்கும், சாதுக்களுக்கும் தேவை இல்லை, மாறாக ரௌடிக்களுக்கும், குண்டர்களுக்கும், கள்ளச்சாராயம் காயச்சுபவர்களுக்கும், பெண் வியாபாரிகளுக்கும், மட்டமான அரசியல்வாதி களுக்கும் தான் தேவை.. .உண்மை , நேர்மை, ஆழ்ந்த இறை பக்தி, இந்து சமுதாயத்தை ஒற்றுமை படுத்தி, ஜாதி, இனம், வேற்றுமை கலைந்து, இந்து மதத்தை மேலோங்க செய்வது தான் ஆதீனம் போன்ற மடங்கள்... தினம் தினம் நீங்கள் விடும் அறிக்கைகளும், வீர வசனமும் இந்து மதத்தை நிர்வாணப்படுத்துவது போல் இருக்கிறது.. கேட்டால் என் இஷ்ட்டம், என் விருப்பம் யாரும் என்னை கேட்க முடியாது, என்கிறீர்கள்,, ஆதீன சொத்து நீங்க ரத்த வியர்வை யில் சம்பாதித்த சொத்தா? உங்களின் உழைப்பில் ஒரு ரோஜா செடிக்கு தண்ணீர் விட்டு வளர்த்த பங்காவது உண்டா? தினம் பாலும், வெண்ணெய்யும், பருப்பும் பிசைந்து தின்றுவிட்டு குமரிகளுடன் குத்தாட்டம் போடவா இந்து மதம் உங்களுக்கு வகை படுத்தி தந்திருக்கிறது.? மதத்தை வளர்க்க, மதத்திற்கு சேவை செய்ய ஏற்ப்படுத்தப்பட்ட ஆதீனங்களை உங்கள் வசதிக்கு வளைத்துக்கொண்டு வளர்க்கிறீர்கள், அதற்க்கு தலைமை ஒரு ஆண் சீ வெட்கக்கேடு,, அரசாங்கம் ஆதீனத்தை முடக்கி இந்த நித்தி, சீர்காழி சிற்பி இவர்களை திருவோடு கொடுத்து கோவில் முன் உட்கார வைக்க வேண்டும்.. பொதுமக்கள் இதற்க்கு பாடு பட வேண்டும்... 
Friday, May 11,2012 10:21 AM, ஆதீனம் said: 
நேற்று கூட ஆதீன மடத்தில் நான் லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகிவிட்டது. உடனே எனது கையில் இருந்த செல்போன் மூலம் நித்யானந்தாவிற்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர் ஓடி வந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார்.அவருக்கு என் மேல் அளவு கடந்த காதல் உண்மையான காதல் தோற்காது இது அசிங்கம் அல்ல நான் சிங்கம் 
On Saturday, May 12,2012 01:28 PM, கோவிலூர் குசும்பன் said :
கட்டில் மெக்கானிசம் கற்றவர் நித்தி - என்றுதான் நமக்கெல்லாம் நன்கு தெரியும்.! லிப்ட் மெக்கானிசம்கூட கற்றவர்போல் (அ)சிங்கம் சொல்கிறதே.! ஒரு உதை விட்டதும் கதவு திறக்குற அந்த (உருப்படாத) லிப்ட்டின் பெயர் என்னய்யா...? அதையாவது உருப்படியா சொல்லித் தொலையுமைய்யா...! நானாவது உருப்படுற வழியை பார்த்துக்கிறேன்...!!
Friday, May 11,2012 10:05 AM, நித்யானந்தாவின் சீடன் said: 
நித்யானந்தா போல் திறமை கொண்ட ஒருவரை ஆதீனமாக்குவதில் எந்த தவறும் கிடையட்து ! லிப்டில் சென்று மதுரை ஆதீனத்தின் உயிரை காபற்றிய நித்யானந்தா வாழ்க ! 
On Friday, May 11,2012 10:10 AM, மானமுள்ளவன் said : 
டேய் சீடா, உனக்கு அசிங்கமாக தெரியல்லையா 
On Friday, May 11,2012 10:32 AM, நித்தியானந்தாவின் சீடன் said :  
என்னடா அசிகம் ! நம் மதத்தினரை நாமே தூற்றுவதா ? பாருங்கட மத்த மத்தினரை ? எவனாவது அவன் மதத்தினரை இப்படி தூற்றி எழுதவான ? என்னடா நடக்குது இங்கே ? இப்ப என்னடா பண்ணுவீங்க ? உங்க சட்டம் கிட்டம் எதுவும் இவர் கிட்டே நடக்காது ! மூடிகிட்டு அவ்வவ வேலையை பாருங்கட ! என்னவோ பெருசா எழுத வந்துட்டணுக !
On Friday, May 11,2012 11:02 AM, போலி சாமி said : 
நாங்கள் நல்ல மனிதர்களாக வாழ நினைபவர்கள்..... மனிதநேயத்திற்கு பிறகே மதம் .........
Friday, May 11,2012 09:59 AM, இந்தியன்   said: 
நீ சிங்கமா ??? ஐயோ பாவி ... ஆதீனத்துக்கு என்று ஒரு கண்ணியம் இருந்தது அதை கெடுத்துவிட்டாயே ??? 
Friday, May 11,2012 09:56 AM, பரம்பரை said:  
மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள். இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்?அவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் காரணமாக அறியாமை என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர் மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அல்ல 
Friday, May 11,2012 09:56 AM, Vallavan said:  
நான் சிங்கம் போன்றவன். என்னை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். நேற்று கூட ஆதீன மடத்தில் நான் லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகிவிட்டது. உடனே எனது கையில் இருந்த செல்போன் மூலம் நித்யானந்தாவிற்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர் ஓடி வந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார். லிப்ட் சாவியை எதிர்பார்க்காமல் என் உயிர் மீது அக்கறை கொண்டு செயல்பட்டவர்தான் நித்யானந்தா. ..... இவரு ஜாக்சனு...ஓடிவந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார்...சூப்பர்...... 
On Friday, May 11,2012 09:59 AM, பரம்பரை said :  
லிப்டில் லிருந்து தன்னை தானே காப்பாற்ற முடியாதவன். அப்புறம் எப்படி?
On Friday, May 11,2012 10:07 AM, இந்தியன் said :  
லிப்டு ஸ்டாப்ஆனபோது கடவுளை கூப்பிட உனக்கு தெரியவில்லை ?? நீ நாமீதாவை கூப்பிட வேண்டியது தானே நீஎல்லாம் ஒரு இது என்று, உன்னை நம்பிய நாங்கள் தான் முட்டாள்கள் 
Friday, May 11,2012 09:55 AM, ராஜ்   said: 
உங்களுக்கு எதுடா மானம் மரியாதை, நீங்கெல்லாம் எப்படி மான நஷ்ட வழக்கு போடுவிங்க ? 
Friday, May 11,2012 09:53 AM, ராஜ் said: 
அவன் ஒபாமாவை கூட பேச்சில் மயக்கிவிடுவான், நீயெல்லாம் எம்மாதரம், கலி காலம் அதான் சாமியார்கள் கூட கள்ள உறவை ஆதரிகிறார்கள் 
Friday, May 11,2012 09:51 AM, நலம் virumbi said:  
நீ ஒரு கேளட்டு சிங்கம் , அதனால் தான் நீங்களும் நித்தி காம சிங்கம் மாதிரி உளறுகிறீர் .

No comments:

Post a Comment