அழிக்கப்படும் புராதனங்கள்

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில்,
கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle
எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு
சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி
எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய,
சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை,
கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப்
பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே.
கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி
முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban)
ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள்
பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால்,
குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம்
உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும்
இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை.
மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும்
தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக்
காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர்.
இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள
மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை
தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை
தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும்
இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு
உடனடியாக கவனிக்குமா?
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியீடு செய்யுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி: http://fourthpillar.wordpress.com/
திரு. ஆரூரன் - http://arurs.blogspot.com/2010/10/blog-post_14.html
புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி: collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be
built by present or future govt. Such monuments are telling poetry,
history of geography of glorious past.
Regards,
collrpdk@tn.nic.in

No comments:
Post a Comment