அப்பாவும் மகனும் !
மூன்றே மாதத்தில் புட்டிப்பால் உனக்கு !
பாசத்தின் தாலாட்டில் தூங்கினேன் நான்,
பணிப் பெண்ணுக்கு பயந்தே தூங்கினாய் நீ !
ஐந்து வயதில் ஆரம்ப பள்ளி எனக்கு,
தவழ்ந்த வயதில் பாலர்பள்ளி உனக்கு !
கரும்பலகையில் கைவலிக்க எழுதிபடித்தேன் நான்,
கணனியில் விரல் வைத்து வியக்க வைத்தாய் நீ !
கோலி, கில்லி, பரமபதம் விளையாடினேன் நான்,
கேம்பாயும், வார்கிராப்ட் புகுந்து விளையாடுகிறாய் நீ !
நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,
கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ !
அன்று தீப்பெட்டி தொலைபேசி எனது,
இன்று வீடியோ சொல்போன் உனது !
தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !
No comments:
Post a Comment