Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Tuesday, 2 July 2013

இயற்கையை மனிதன் வெல்ல முடியுமா?

இயற்கையை மனிதன் வெல்ல முடியுமா?


இயற்கையை எதிர்த்து மனிதன் வாழ முடியாது. மலையை அழித்து, மரங்களை வெட்டி கட்டிடங்கள் கட்டினால், இயற்கை சீற்றம் வரும் போது அந்தக் கட்டிடங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உத்தரகாண்டில் அதுதான் நடந்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகையே 1 கோடிதான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மட்டும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.5 கோடி. அதாவது இரண்டரை மடங்கு அதிகம் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான எந்த அடிப்படை வசதியும் கிடையாது. இஷ்டம் போல் கட்டிடங்கள். அதில் ஓட்டல்கள், தங்குமிடங்கள். 

எந்த விதிமுறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆபத்தான மலைச்சரிவுகள், எந்த நேரமும் வெள்ளம் வரக் கூடிய ஆற்றோரங்கள், சாலை வளைவுகள் என எங்கு பார்த்தாலும் சிறியதும் பெரியதுமாக கட்டிடங்கள். சின்னச் சின்ன விதிமுறை மீறல்கள்தான். ஆனால் ஒரு பெரிய மழை பெய்து, ஆற்றில் வெள்ளம் வந்தவுடன் அத்தனையும் காணாமல் போய் விட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி ஆயிரக் கணக்கான பக்தர்கள் பலியானதற்கு இதுதான் காரணம். இன்னும் பல ஆயிரம் பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கடந்த 18ம் தேதி வரை உத்தரகாண்டில் கனமழை. வழக்கமான மழையை விட 4 மடங்கு அதிகம். எப்போது வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற நிலையில்தான் மீண்டும் அங்கு பேய் மழை பெய்திருக்கிறது. ஏறக்குறைய 90 கட்டிடங்கள் அடியோடு சரிந்து ஆற்றில் விழுந்திருக்கின்றன. வலுவான அஸ்திவாரம் இல்லாததால் சீட்டுக் கட்டு போல் சரிந்து விட்டன. அதில் தங்கியிருந்த அத்தனை பக்தர்களும் ஆற்றில் மூழ்கி பலியாகி விட்டனர்.

இப்போதைய சூழ்நிலையில் நிலச் சரிவால் வீடு திரும்ப முடியாமல் சிக்கியிருக்கும் பக்தர்களை மீட்பதுதான் முதல் பணி. அதில் ராணுவம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. ஆனால் இ¢த்தனை பேர் பலியானதற்கு காரணமான விதிமுறை மீறல்களுக்கு யார் பொறுப்பேற்பது. விரிவான விசாரணை நடத்த வேண்டும். விதிமுறை மீறலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment