இப்படியும் சில மோசடிகள்
இந்த அனுபவம் எங்களது உறவினருக்கு நேரிட்ட அனுபவம். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது அம்மாவின் அக்காள், தனது கணவருடன் பல்லாவரத்தில் வசித்து வருகிறார். இருவருக்குமே நீரிழிவு நோய் என்பதால் அவ்வப்போது சென்னை பொது மருத்துவமனைக்கு வந்து நீரிழிவு மாத்திரைகளை வாங்கிச் செல்வார் என் பெரியப்பா. அவரது மூத்த மகள் சென்னை களங்கர¨ விளக்கம் அருகில் வசித்து வருகிறார்.
இது முன் கதை சுருக்கம்.
நிகழ்வு - ஒரு நாள் காலை வேளையில் என் அக்கா வீட்டின் அருகே ஒரு வயதானவர் நின்று கொண்டு இங்கு என் அக்காவின் பெயரையும், மாமாவின் பெயரையும் சொல்லி அவர்களது வீடு எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒருவர் என் அக்காவின் வீட்டைக் காண்பித்து அனுப்பி வைத்துள்ளார். அவர் என் அக்காவிடம் வந்து உங்களது தந்தை மருத்துவமன(பெயரைச் சொல்லி) வழியில் விபத்தில் சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரை நான்தான் மருத்துவமனையில் சேர்த்தேன். உங்கள் முகவரி கொடுத்து உடனடியாக ரூ.500 பெற்று வரச் சொன்னார். ரத்தம் செலுத்த பணம் கேட்டு மருத்துவமனையில் அவசரப்படுத்தியதால் ஆட்டோவில் வந்தேன். அதற்குத் தனியாக 200 கேட்டார்.
அவசரத்தில் எதுவும் புரியாத என் அக்காவோ, முதலில் காசைக் கொடுத்துள்ளார்.
அவசரக் கோலத்தில் கிளம்பி அவருடன் வெளியே செல்ல, அவரோ வந்த ஆட்டோவில் வேகமாகக் கிளம்பி போய்விட்டார். அவரைக் காணாது திகைத்த என் அக்கா, உடனடியாக அம்மா வீட்டிற்கு போன் செய்து பேசியதில், அன்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அப்பா ஏதோ ஒரு காரணத்தால் போகாமல் வீட்டிலேயே இருந்தது தெரிய வந்தது.
அதன் பிறகு அக்கா ஒரு பெரிய ஏமாற்றத்துடன், நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நான் யோசிக்கிறேன் என்றால், மருத்துவமனைக்கு வரும் என் பெரியப்பா அவரது சொந்தக் கதையை தன்னுடன் மருத்துவமனைக்கு வரும் யாராவது ஒருவரிடம் கூறியிருப்பார். அவர் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்திவிட்டார்.
எனவே, புதிதாக சந்திக்கும் நபர்களிடம் நமது உறவு முறைகளையும், பெயர்களையும், விலாசத்தையும் கூற வேண்டாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த அனுபவம் எங்களது உறவினருக்கு நேரிட்ட அனுபவம். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது அம்மாவின் அக்காள், தனது கணவருடன் பல்லாவரத்தில் வசித்து வருகிறார். இருவருக்குமே நீரிழிவு நோய் என்பதால் அவ்வப்போது சென்னை பொது மருத்துவமனைக்கு வந்து நீரிழிவு மாத்திரைகளை வாங்கிச் செல்வார் என் பெரியப்பா. அவரது மூத்த மகள் சென்னை களங்கர¨ விளக்கம் அருகில் வசித்து வருகிறார்.
இது முன் கதை சுருக்கம்.
நிகழ்வு - ஒரு நாள் காலை வேளையில் என் அக்கா வீட்டின் அருகே ஒரு வயதானவர் நின்று கொண்டு இங்கு என் அக்காவின் பெயரையும், மாமாவின் பெயரையும் சொல்லி அவர்களது வீடு எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒருவர் என் அக்காவின் வீட்டைக் காண்பித்து அனுப்பி வைத்துள்ளார். அவர் என் அக்காவிடம் வந்து உங்களது தந்தை மருத்துவமன(பெயரைச் சொல்லி) வழியில் விபத்தில் சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரை நான்தான் மருத்துவமனையில் சேர்த்தேன். உங்கள் முகவரி கொடுத்து உடனடியாக ரூ.500 பெற்று வரச் சொன்னார். ரத்தம் செலுத்த பணம் கேட்டு மருத்துவமனையில் அவசரப்படுத்தியதால் ஆட்டோவில் வந்தேன். அதற்குத் தனியாக 200 கேட்டார்.
அவசரத்தில் எதுவும் புரியாத என் அக்காவோ, முதலில் காசைக் கொடுத்துள்ளார்.
அவசரக் கோலத்தில் கிளம்பி அவருடன் வெளியே செல்ல, அவரோ வந்த ஆட்டோவில் வேகமாகக் கிளம்பி போய்விட்டார். அவரைக் காணாது திகைத்த என் அக்கா, உடனடியாக அம்மா வீட்டிற்கு போன் செய்து பேசியதில், அன்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அப்பா ஏதோ ஒரு காரணத்தால் போகாமல் வீட்டிலேயே இருந்தது தெரிய வந்தது.
அதன் பிறகு அக்கா ஒரு பெரிய ஏமாற்றத்துடன், நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நான் யோசிக்கிறேன் என்றால், மருத்துவமனைக்கு வரும் என் பெரியப்பா அவரது சொந்தக் கதையை தன்னுடன் மருத்துவமனைக்கு வரும் யாராவது ஒருவரிடம் கூறியிருப்பார். அவர் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்திவிட்டார்.
எனவே, புதிதாக சந்திக்கும் நபர்களிடம் நமது உறவு முறைகளையும், பெயர்களையும், விலாசத்தையும் கூற வேண்டாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment