Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Tuesday, 18 September 2012

லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயப் பிரச்சனைகள்!
 
 
 
லிப்ஸ்டிக்குகள் மற்றும் நாம் கைகழுவப் பயன்படுத்தும் திரவப்பொருட்களில் சிலவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மை இருதயப்பிரச்சனைகளை தோற்றுவிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் இது பற்றிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் (triclosan) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது. இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக இந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலிகளில் டிரைக்ளோசனைப் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொண்ட போது 20 நிமிடத்திலேயே எலிகளில் இருதயச் செயல்பாடுகள் படிபடிப்படியாக குறைந்ததை இவர்கள் கண்டனர்.

இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட டிரைக்ளோசன் அளவுகள் அதிகம், ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உள்ள இந்த ரசாயனத்தின் அளவு மிகக்குறைவே என்று இந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்தனர்.

டிரைக்ளோசன் பற்றி ஏதோ இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ரசாயனத்திற்கும் தைராய்டு பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

தசைகளில் இதன் தாக்க்ம் பற்றி இப்போதுதான் ஆராய்ப்படுகிறது.

மருதுதுவ மனைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாக்டீரியா நுண்ணுயிரித் தாக்கத்தை இது தடுப்ப்தாகவே டாக்டர்கள் கருதுகின்றனர்.

ஆனால் கலிபோர்னியா விஞ்ஞானிகளோ இந்த ரசாயனத்தின் தாக்க்ம் உடல் உறுப்புகளிலும் விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

டிரைக்ளோசன் அனைத்திலும் உள்ளது, சுற்றுப்புறச் சூழலில் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கே நன்மை பயப்பதல்ல என்று கூறுகின்றனர்.

நல்ல இருதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இந்த ரசாயனத்தினால் 10% இருதயச் செயல்பாடு குறைந்தால் தெரியாது. ஆனால் இருதயப்பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 10% செயல்பாட்டுக் குறைவு என்பது ஆபத்தல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பரிசோதனையில் எலிகளுக்கு டிரைக்ளோசன் ஏற்றிய 20வது நிமிடத்தில் அதன் இருதய செயல்பாட்டில் குறிப்பிடத்தகுந்த இடரபாடுகள் தெரிந்தது.

ஆகவே பெண்களே உஷார்! லிப்ஸ்டிக் போட்டால்தான் அழகு கூடுகிறது என்பது முதலில் ஒரு மாயை

Sunday, 9 September 2012

DID YOU EVER SEEN SUCH A PICTURE?..WHAT YOU LEARN FROM THE CREW....?

திபெத், இமாலயப் பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன!
 
 
 
திபெத் பீடபூமியில் உள்ள பெரும்பாலான பனிமலைகளில் பனி அதிவேகமாக உருகி வருவதாக கடந்த 30 ஆண்டுகால ஆய்வுகளை மேற்கொண்ட சீன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு ஆய்வு தெரிவித்தது போல் திபெத் பனிமலைகள் வளர்ந்து வருகின்றன என்பது முற்றிலும் தவறு என்று தற்போது தெரியவந்துள்ளதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சீன பனி மலை ஆய்வாளர்களின் இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் விஞ்ஞான இதழான நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்பதில் விரிவாக வெளியாகியுள்ளது.

திபெத் பீடபூமி என்பதிலிருந்து உருவாகும் மலைத்தொடர்கள்தான் இமாலயம், காரகோரம், பாமீர், மற்றும் கிலியன் ஆகியவையாகும். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு லட்சம் சதுர கில்மோமீட்டர் பரப்புடையது. இந்தப் பனிமலைகளின் மூலம் ஆசியாவில் உள்ள 1.4 பில்லியன் மக்கள் தொகைக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

இங்கிருந்துதான் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதி, மேகாங், யாங்சீ போன்ற மிகப்பெரிய நதிகள் பூமியை நனைக்கின்றன. மிகப்பெரிய அளவில் புதிதான நீரை வழங்கி வரும் இதனை 'பூமியின் 3வது துருவம்' என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

தற்போது உலகவெப்பமயமாதலினால் இந்த பனிப்பிரதேசங்களுக்கு ஆபத்து விளைந்துள்ளது.

சீன ஆய்வாளர்கள் சுமார் 7,100 பனிச்சிகரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக முக்கியமான 15 பனிமலைகளை நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் கண்ட உண்மை என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பனிச்சிகரங்களில் பனி வற்றி வருகிறது.

பனி உருகுகிறது ஆனால் புதிய பனிப்படலங்கள் உருவாவதில்லை. இதனால் பனி வற்றிய மலைகளாக இவை ஆகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக இந்த பனிமலைத் தொடர்களில் காரகோரம் உள்ளிட்ட மற்ற சிகரங்களை விட இமயமலைப் பனிப்பாறைகள் விரைவில் பனியற்றதாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏன் இமாலயத்தில் மட்டும் அதிவேகமாக பனி வற்றிப்போகிறது என்றால் காற்றுதான் காரணம் என்று கூறுகின்றனர்.

இந்திய பருவநிலைகள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக மாறிவருவதால் அதனை நம்பியிருக்கும் இமாலயப் பனிமலைகள் உருகுவதும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆவ்ய்கள் மேலும் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிடவுள்ளன.
 
“பூமியை தாக்கிய டைனோசர்களின் குசு”
 
 
 
 
பிரம்மாண்ட டைனோசர்களின் குசு(மலக்காற்று) ஒரு காலத்தில் பூமியை பெரும் அளவில் வெப்பமைடைய செய்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் அறிவியலாளரான டேவிட் வில்கின்சன் மற்றும் அவரது நண்பர்கள் இதுக்குறித்த ஆய்வறிக்கையை கரண்ட் பையாலஜி என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

மிகப்பெரிய டைனோசர்கள் வாழ்ந்த சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி அதிக வெப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு டைனோசர்களின் குசு கூட காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

அறிவியலாளர்கள், டைனோசர்கள் வெளியிடும் குசு தன்மை எவ்வளவு என்பதை ஆய்வு செய்தனர்.

அப்போது வாழ்ந்த மொத்த டைனோசர்களிடமிருந்து ஆண்டுக்கு 520 மில்லியன் டன் வாயு உற்பத்தியாகியதாம்.

இதில் மீதேன் வாயு அடங்கி உள்ளதாம்.

பொதுவாக ‘கிரீஹவுஸ் கேஸ்’ எனப்படும் மீதேன் வாயு சூரியனிடமிருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை உடையது.

இதனால், பூமியில் வெப்பம் அதிகரிக்கும்.

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், உயிரினங்களின் மீதேன் உற்பத்தியால் அத்தகைய புவியின் சுழ்நிலையை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை ஆய்வு பொருளாக வைத்து அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதற்காக டைனோசரை எடுத்துக்கொண்ட அவர்கள் இந்த அதிர்ச்சி தகவலை நமக்கு கூறுகின்றனர்.

தற்போது, மீதேன் உற்பத்தியானது, வெவ்வேறு இயற்கை பொருட்களிடமிருந்து 500 மில்லியன் டன் ஆண்டொன்றிற்கு கிடைக்கிறதாம்.

ஆனால், வெறும் டைனோசர்கள் மட்டுமே 520மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளன. மேலும், டைனோசர் மட்டுமல்லாமல், மற்ற பொருட்கள் மூலமும் மீதேன் உற்பத்தி நடந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் பாருங்கள்... தற்போதுள்ள வெப்ப அளவை விட சுமார் 150, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு வெப்பம் இருந்திருக்கும் என்று...
இப்படியும் சில மோசடிகள்

இந்த அனுபவம் எங்களது உறவினருக்கு நேரிட்ட அனுபவம். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது அம்மாவின் அக்காள், தனது கணவருடன் பல்லாவரத்தில் வசித்து வருகிறார். இருவருக்குமே நீரிழிவு நோய் என்பதால் அவ்வப்போது சென்னை பொது மருத்துவமனைக்கு வந்து நீரிழிவு மாத்திரைகளை வாங்கிச் செல்வார் என் பெரியப்பா. அவரது மூத்த மகள் சென்னை களங்கர¨ விளக்கம் அருகில் வசித்து வருகிறார்.

இது முன் கதை சுருக்கம்.

நிகழ்வு - ஒரு நாள் காலை வேளையில் என் அக்கா வீட்டின் அருகே ஒரு வயதானவர் நின்று கொண்டு இங்கு என் அக்காவின் பெயரையும், மாமாவின் பெயரையும் சொல்லி அவர்களது வீடு எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒருவர் என் அக்காவின் வீட்டைக் காண்பித்து அனுப்பி வைத்துள்ளார். அவர் என் அக்காவிடம் வந்து உங்களது தந்தை மருத்துவமன(பெயரை‌ச் சொ‌ல்‌லி) வழியில் விபத்தில் சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரை நான்தான் மருத்துவமனையில் சேர்த்தேன். உங்கள் முகவரி கொடுத்து உடனடியாக ரூ.500 பெற்று வரச் சொன்னார். ரத்தம் செலுத்த பணம் கேட்டு மருத்துவமனையில் அவசரப்படுத்தியதால் ஆட்டோவில் வந்தேன். அதற்குத் தனியாக 200 கேட்டார்.

அவசரத்தில் எதுவும் புரியாத என் அக்காவோ, முதலில் காசைக் கொடுத்துள்ளார்.

அவசரக் கோலத்தில் கிளம்பி அவருடன் வெளியே செல்ல, அவரோ வந்த ஆட்டோவில் வேகமாகக் கிளம்பி போய்விட்டார். அவரைக் காணாது திகைத்த என் அக்கா, உடனடியாக அம்மா வீட்டிற்கு போன் செய்து பேசியதில், அன்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அப்பா ஏதோ ஒரு காரணத்தால் போகாமல் வீட்டிலேயே இருந்தது தெரிய வந்தது.

அதன் பிறகு அக்கா ஒரு பெரிய ஏமாற்றத்துடன், நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நான் யோசிக்கிறேன் என்றால், மருத்துவமனைக்கு வரும் என் பெரியப்பா அவரது சொந்தக் கதையை தன்னுடன் மருத்துவமனைக்கு வரும் யாராவது ஒருவரிடம் கூறியிருப்பார். அவர் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்திவிட்டார்.

எனவே, பு‌திதாக ச‌ந்‌தி‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் நமது உறவு முறைகளையு‌ம், பெய‌ர்களையு‌ம், ‌விலாச‌த்தை‌யு‌ம் கூற வே‌ண்டா‌ம். எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.